Saturday, May 8, 2010

கடவுளை விடவும்!!

காதல்
விபத்து தான்!
இந்த
விபத்தில் மட்டுமே
இருப்பவை அழகாகும்!
இழப்பவை வரவாகும்!

இமைகள் அறியாமல்
ஊடுவும் கனவை போல
இதயமும் அறியாமல்
காதல் பிறந்திடும்!

காற்றின் சிறகினை
கடன் வாங்கி
இரு
இளமை இதயங்கள்
மேகம் உரசிடும்!

இயேசு மட்டுமா?
காதலும் கூட
ஓர் அப்பத்தை வைத்தே
இரு உலகத்தின்
பசியை போக்கிடும்!!

மனிதன் கொண்ட
பாவங்களை
தன்
நிழலாலே நீக்கிடும்!

ஒற்றை புன்னகையில்
உயிரையே பறித்திடும்!
ஒரு பூவிலே-இரு
இதயம் இணைத்திடும்!

கடவுளிடம் கோரிக்கை
வைக்காமல்
காதலர்கள்
காதலிடம் கோரிக்கை
வைக்கும் நிலை
காதலிலே வாய்த்திடும்!

மார்கழி காலையில்
மலர்ந்திடும் பூக்களின்
பனித்துளி இரசிக்கும்
பக்குவம்
காதலில் மட்டுமே
கைவர சாத்தியம்!!

வரங்கள் கொடுக்கும்
கடவுளை விடவும்!
வரமாய் கிடைக்கும்
மெய்
காதலே சத்தியம்!!

புத்தகம்!!

புத்தகம்!
எழுத்துக்கள் சுமந்து வரும்
வெள்ளைத் தாள்!!
மனிதனுக்கு
அறிவை கொடுத்திட
தாளில் வந்த
ஞானப் பால்!!

புத்தகம்!
கடந்ததனைத்தையும்
கண் முன் வைக்கும்!!
நடப்பதை எல்லாம்
நமக்கென விளிக்கும்!!
நாளை நடப்பதை கூட
நயமாய் ஒலிக்கும்!!
புகைப்படம் கூட-எடுக்கும்
அந்த
ஒற்றை நொடியை மட்டுமே பிரதிபலிக்கும்!!

புத்தகம்!
வாசிக்கும் மனிதனை
வசமாக்கும்!!-இது
பாழ்பட்ட மனதினை
பண்பாக்கும்!!
ஆழ்மனதின்
அறியாமை இருளை
அதட்டி விரட்டி
பகலாக்கும்!!

மண்ணும் பொன்னும் பெண்ணும் தானா
மனிதனின் தேவை?
புத்தியை வளர்த்திட புத்தகத் தேடலே
மனித மனதின் முதன்மை தேவை!!

நிலமாய் வாங்கி இருந்தால்-பத்திரத்தால்
நிறைந்திருக்கும் என் அலமாரி!!
பொன்னிலே மதிப்பென்றால்-என்
புத்தி
பூஜ்யதிலே நின்றிருக்கும்!!
பெண்ணால்
காமத்தின் எல்லைக்குள்
கால் வைத்திருந்தால்
கால்மணியில் அந்த சுகம்
களிப்பின்றி போயிருக்கும்!!

புத்தகத்தின் மீது கொண்ட
போதையினால்-என் வாழ்க்கை
புது திசையில் பயணிக்கின்றது!!
புத்தகத்தின் துணையால் தான்
என்
அறிவின் எல்லை
அரையடியேனும் வளர்ந்திருக்கிறது!!

நான் காணாத கம்பன்!
நான் காணாத வள்ளுவன்!
நான் காணாத இளங்கோ!
நான் காணாத பாரதி!
நான் காணாத பெரியார்!
நான் காணாத அண்ணா!
நான் காணாத காமராஜர்!
நான் காணாத காந்தி!
நான் காணாத இந்திரா!
நான் காணாத ராஜீவ்!
நான் காந்த மார்க்ஸ்!
நான் காணாத லெனின்!
நான் காணாத காஸ்ட்ரோ!
நான் காணாத சேகுவேரா!
நான் காணாத மாவோ!
நான் காந்த மார்டின்லுதர்!
நான் காந்த நெல்சன் மண்டேலா!
நான் காந்த அன்னை தெரசா!
நான் காணாத இன்னும் பலரையும்
எனக்கு
புத்தகமே அறிமுகம் செய்தது!
அதுதான்-இந்த உலகிற்கும்
எனக்குமான
இடைவெளியை குறைத்தது!

வாசிக்கும் பழக்கத்தை
வசதியாக மறக்கின்ற சமுகமே!
வெறும் காகிதமென்று சொல்லி
அறிவுப் புதையலை வெறுக்காதிர்!

அடுத்தவர் அறிவுதான் புத்தகம்
அதிலும் நமக்கு பயனிருக்கு!!
எப்படி என்றால்
உந்தன் அறிவில் தான்-அடுத்த
தலைமுறையின் விதை இருக்கு!!