குளிர்கால மலர் போல பதமானவள்-இரு
குழை ரெண்டை சுமக்கின்ற கொடியானவள்
இடைமீது உடை கொண்ட பனியானவள்-சிறு
இதழாலே எனை கொல்லும் வலுவானவள்
சந்தங்கள் அடுக்கி வைத்த கவியானவள்-என்
சந்தோஷம் திறந்து வைக்கும் வழியானவள்
கருநீலக் கண் கொண்ட கலையானவள்-என்
கண்ணீரை இனிப்பாக்கும் சுவையானவள்
செந்தாழம் மலர் வீசும் மனமானவள்-காதல்
சொல்லாத என் நெஞ்சிற்கு மணமானவள்
பொல்லாத தனிமையில் என் துனையானவள்-நான்
பெய்கின்ற கவிகளுக்கு அவளே கருவானவள்
என் எரிகின்ற கனவுகளில் நெருப்பானவள்-தினம்
இரவில் தீர்கின்ற எனதுயிருக்கு பொறுப்பானவள்
விண்மீன்கள் விலை பேசும் ஒளியானவள்-நினைவில்
விலகாமல் எனை தொடரும் நிழலானவள்
சிறகில்லா என் உடலுக்கு சிறகானவள்-இருந்தும்
சிறையில்லா எந்தன் மனதுக்கு சிறையானவள்
கரையில்லா என் வாழ்க்கைக்கு கரையானவள்-நீரில்
கரைத்தாலும் விலகாத நிலவின் கறையானவள்
என் இதழ்களின் செயல்களில் சிரிப்பானவள்-என்
இரு கைகளின் செயல்களில் அனைப்பானவள்
என் எண்ணத்தின் செயல்களில் சொல்லானவள்-துடிக்கும்
என் இதயத்தின் செயல்களில் அன்பானவள்
எல்லாரும் முயன்றும் முடியாத மலையானவள்-அவள்
எனக்காக எனதருகில் உயிர்ச் சிலையானவள்
என்றென்றும் தீராத கடலின் அலையானவள்-நெஞ்சில்
எப்போதும் சுரக்கின்ற காதலில் நிலையானவள்
************************************************************************************
இந்த கவிதையில் உள்ளவள் யாரென்று கேட்காதீர்கள், ஏன்னென்றால்?
பதில் இல்லா கேள்வி பயனற்றது!!
************************************************************************************
Wednesday, April 14, 2010
காந்திக்கும் எனக்கும்!!!
ஒரு சிரிப்பை மட்டுமே
தந்துவிட்டு
என் இதயத்தை
எடுத்து சென்றவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
காற்றுக்கு கால் முளைத்த
மாதிரி!
பூவுக்கு வாய் முளைத்த
மாதிரி!
இப்படி எல்லா மாதிரிக்கும்
மாதிரியாய் இருந்தவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
உன்னை காணாத நேரத்தில்
உனக்கென
கவிதை செய்யும் என்னிதயம்
நீ
பக்கத்தில் இருக்கையில்
படபடத்த காரணத்தை என் சொல்ல?
பயமா? - உன்னழகை
பார்த்ததால் மயக்கமா?
சொன்னால்-என்னை
வெறுத்திடுவாயோ
என்ற தயக்கமா? என் சொல்ல?
சந்திரன் இருக்கும் வரை
நினைக்கப் படாத
நட்சத்திரத்தை போலவே
நீ
எனதருகில் இருக்கும் வரை
என் நெஞ்சத்தின்
எண்ணங்கள்
எனக்கு புலப்படவில்லை!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பூமியும் கூட
ஒரு
சுயநலத்தோடு தான்
சூரியனை
சுற்றி வருகிறது!
என் இதயமோ
என்னையும் மறந்தல்லவா
உன்னையே நினைக்கிறது!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
கண் திறக்கும் போதெல்லாம்
உன்னையே தேடுகிறது
கண்கள்!!
வைக்கும் அடியெல்லாம்
உன்னையே நோக்கி வைக்கிறது
கால்கள்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பொதுவுடைமை கற்றுத்தந்த
கார்ல் மார்க்ஸ் ஜென்னியிடம்
கொண்ட காதலையும்!!
உலகத்தையே ஆள நினைத்த
ஹிட்லர் பிரௌனிடம்
கொண்ட காதலையும்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இந்த காதலின்
அர்த்தத்தை
என்னவென்று!
சுதந்திரத்தை நேசித்த
மோகன் தாஸ்
கரம்சந்தை போல
நானும் உன்னை நேசித்தேனடி! - ஆனால்
இன்று - நான் விரும்பிய
நீயோ எனக்கு கனவாகி
போனாய்!
காந்திக்கு சுதந்திரம்
ஆனதை போலவே!!
தந்துவிட்டு
என் இதயத்தை
எடுத்து சென்றவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
காற்றுக்கு கால் முளைத்த
மாதிரி!
பூவுக்கு வாய் முளைத்த
மாதிரி!
இப்படி எல்லா மாதிரிக்கும்
மாதிரியாய் இருந்தவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
உன்னை காணாத நேரத்தில்
உனக்கென
கவிதை செய்யும் என்னிதயம்
நீ
பக்கத்தில் இருக்கையில்
படபடத்த காரணத்தை என் சொல்ல?
பயமா? - உன்னழகை
பார்த்ததால் மயக்கமா?
சொன்னால்-என்னை
வெறுத்திடுவாயோ
என்ற தயக்கமா? என் சொல்ல?
சந்திரன் இருக்கும் வரை
நினைக்கப் படாத
நட்சத்திரத்தை போலவே
நீ
எனதருகில் இருக்கும் வரை
என் நெஞ்சத்தின்
எண்ணங்கள்
எனக்கு புலப்படவில்லை!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பூமியும் கூட
ஒரு
சுயநலத்தோடு தான்
சூரியனை
சுற்றி வருகிறது!
என் இதயமோ
என்னையும் மறந்தல்லவா
உன்னையே நினைக்கிறது!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
கண் திறக்கும் போதெல்லாம்
உன்னையே தேடுகிறது
கண்கள்!!
வைக்கும் அடியெல்லாம்
உன்னையே நோக்கி வைக்கிறது
கால்கள்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பொதுவுடைமை கற்றுத்தந்த
கார்ல் மார்க்ஸ் ஜென்னியிடம்
கொண்ட காதலையும்!!
உலகத்தையே ஆள நினைத்த
ஹிட்லர் பிரௌனிடம்
கொண்ட காதலையும்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இந்த காதலின்
அர்த்தத்தை
என்னவென்று!
சுதந்திரத்தை நேசித்த
மோகன் தாஸ்
கரம்சந்தை போல
நானும் உன்னை நேசித்தேனடி! - ஆனால்
இன்று - நான் விரும்பிய
நீயோ எனக்கு கனவாகி
போனாய்!
காந்திக்கு சுதந்திரம்
ஆனதை போலவே!!
Subscribe to:
Posts (Atom)