ஒரு சிரிப்பை மட்டுமே
தந்துவிட்டு
என் இதயத்தை
எடுத்து சென்றவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
காற்றுக்கு கால் முளைத்த
மாதிரி!
பூவுக்கு வாய் முளைத்த
மாதிரி!
இப்படி எல்லா மாதிரிக்கும்
மாதிரியாய் இருந்தவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??
உன்னை காணாத நேரத்தில்
உனக்கென
கவிதை செய்யும் என்னிதயம்
நீ
பக்கத்தில் இருக்கையில்
படபடத்த காரணத்தை என் சொல்ல?
பயமா? - உன்னழகை
பார்த்ததால் மயக்கமா?
சொன்னால்-என்னை
வெறுத்திடுவாயோ
என்ற தயக்கமா? என் சொல்ல?
சந்திரன் இருக்கும் வரை
நினைக்கப் படாத
நட்சத்திரத்தை போலவே
நீ
எனதருகில் இருக்கும் வரை
என் நெஞ்சத்தின்
எண்ணங்கள்
எனக்கு புலப்படவில்லை!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பூமியும் கூட
ஒரு
சுயநலத்தோடு தான்
சூரியனை
சுற்றி வருகிறது!
என் இதயமோ
என்னையும் மறந்தல்லவா
உன்னையே நினைக்கிறது!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
கண் திறக்கும் போதெல்லாம்
உன்னையே தேடுகிறது
கண்கள்!!
வைக்கும் அடியெல்லாம்
உன்னையே நோக்கி வைக்கிறது
கால்கள்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!
பொதுவுடைமை கற்றுத்தந்த
கார்ல் மார்க்ஸ் ஜென்னியிடம்
கொண்ட காதலையும்!!
உலகத்தையே ஆள நினைத்த
ஹிட்லர் பிரௌனிடம்
கொண்ட காதலையும்!!
உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இந்த காதலின்
அர்த்தத்தை
என்னவென்று!
சுதந்திரத்தை நேசித்த
மோகன் தாஸ்
கரம்சந்தை போல
நானும் உன்னை நேசித்தேனடி! - ஆனால்
இன்று - நான் விரும்பிய
நீயோ எனக்கு கனவாகி
போனாய்!
காந்திக்கு சுதந்திரம்
ஆனதை போலவே!!
Subscribe to:
Post Comments (Atom)
nanga vena try pannata un kathalai sethu vaika. un alu phone no. mail id kodu 2 days la avalay una thedi varu va. aparam ne kavithai yelutha thevai illa ava yeluthuva.
ReplyDelete