Wednesday, March 24, 2010

காதல் கட்டளை!!

காதலை எனக்கும்
என்னை காதலுக்கும்
அறிமுகப் படுத்தியவளே!!

முடி கோதும்
உன் விரலசைவில்
என்
இதயத்தின்
ஆணிவேரை அசைத்தவளே!!

தன் இமைக்கைகள் நீட்டியே
என்
விழி உன்னை தேடுதே!!
உன்
ஒரு பார்வை தீண்டியே
என்
உயிர் இங்கே வாழுதே!!

கடல் மறைக்காத
மலை உச்சியே
தீவுகள் ஆவது போல்
என்
மனம் மறைக்காத
உன் நினைவுகளே
காதலாய் ஆனதடி!!
காதலால்
கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போனதடி!!

சிந்திக்கும் நேரத்தில்
சிந்திவிழும் வார்த்தைகள்
உன்னை
சந்திக்கும் நேரத்தில்
மௌனமாய் ஆவதுஏன்??
எதிர்பாராமல்
விழி நான்கும் பார்க்கையிலே-நீ
விலகித்தான் போவது ஏன்?

புளிப்பும் துவர்ப்பும்
கர்பவதி நேசிப்பது!
உன்
சிரிப்பும் காதலும் தான்- இந்த
காதலன் நான் யாசிப்பது!!

தீந்தமிழ் சொல்லாலே
திறவாத இதழ் திறந்து
உம்மென்று சொல்லிவிடு
ஒரு வார்த்தை!! - அந்த
வார்த்தையின் முற்றத்தில் - உருவாகும்
நமக்கான புது வாழ்க்கை!!

உன்
புருவங்கள் இணைக்கும்
கம்பிக் குங்குமத்தையும்!
நம் நிழல்
உருவங்கள் இணைக்கும்
அந்திவெயில் மாலையையும்!
நான்
கவிதையில் பதிகிறேன் கொஞ்சம்!!
கொஞ்சமே என்றாலும்
கொள்ளியிலும் மறக்காது என் நெஞ்சம்!!

உலகக் காதல்
நமக்கே நமக்கென்று
மிச்சமாய் உள்ளதடி!!
மிச்சத்தின் துணைக் கொண்டு
காதலின்
உச்சத்தை தொட்டிடுவோம்!!
காற்றுக்கும் கடலுக்கும்
நம் பெயரை பாடிட
கட்டளைகள் இட்டுடுவோம்!!




No comments:

Post a Comment