Wednesday, March 24, 2010

உன் அழகின் வீரியம்!!

மின்மினி கண்களில்
மின்னலென சிரிக்கிறாய்!
இலைவடிவ இதயத்தை-ஏன்
உளியென இடிக்கிறாய்?
துப்பட்டா முனைகளில்
என்னுலகத்தை முடிகிறாய்!
இமைத்திடும் நேரத்தில்
என்னுள்ளே காதலை செலுத்தினாய்!!
அணுக்களால் ஆனது உடம்பென்று
விஞ்ஞானம் சொன்னது!
அது உன்னிடம் மட்டுமே- தன்
தோல்வியை ஏற்றது!!
பனிமலர் இதழெடுத்து
பாலொளி நிலா குழைத்து
பெண்ணென படைத்ததை
அணுக்களால் ஆனதேன்றா
அறியாமல் சொல்வது?
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்கள்
நிலத்தினில் படலாமா?
பூக்களின் இதழ் தெளித்து
நீ நடந்திட
பாயென தரலாமா?
அதரத்தின் ஓரத்தில்
அதுஎன்ன சிரிப்போ?
ஆண்டனியை வீழ்த்திட்ட
கிளியோபாட்ரா நினைப்போ?
திமிரிடும் அழகினை-அன்பே
திட்டி வை!!
என்னையே உடைக்கிறது-கொஞ்சமேனும்
குட்டி வை!!



No comments:

Post a Comment