புலன் ஐந்தை
புதுப்பிக்கும்
புல்வெளியில் படுத்திருந்தேன்!!
பூஞ்சாரல் மேகமில்லா
புதுவானம் பார்த்திருந்தேன்!!
பூப்போல உன்முகம்-என்
நினைவெளியில் வந்தவுடன்!
ஓர்வண்ண வானத்தில் -நான்
ஏழ் வண்ணம் பார்த்திருந்தேன்!!
பல்லவ சிற்பங்கள்-என்னை
பகடியாய் பார்த்திருக்க
பாறையின் இடுக்கிலும்-உன்
பால்முகம் ரசித்திருந்தேன்!!
காலில்லா காற்றுக்கு
சலங்கைகள் கட்டிவிட்டு - அதன்
ஜதி சொல்லும் பாதத்தில்-உன்
சுவடுகள் பார்த்திருந்தேன்!!
திசை எட்டும் உன் பிம்பம்
தீபம் போல் ஒளிர்ந்திருக்க!!
என் கண்ணீரின் தடத்தை
காதலால் அடைத்திருந்தேன்!!
எங்கேயோ ராகங்கள்
ஒலியினில் சேர்ந்திருக்க
பெயரில்லா ரகத்திற்கு-நான்
வார்த்தைகள் அடுக்கிவைத்தேன்!!
கடல் கொண்ட அக்கரையை
காவலுக்கு வைத்துவிட்டு!
உன் பிரிவால் நான் மட்டும்
இக்கரையில் வாடுகிறேன்!!
எத்தனையோ நாளாகியும்
எட்டாத நிலா பிடிக்க
ஆர்பரிக்கும் அலைகளுக்கு-நான்
ஆதரவாய் நிற்கின்றேன்!!
இயற்கையிடம் பேசுவதாய்
இதயத்தை சொல்லிவிட்டு
எழுத்துக்கள் கோர்துவைத்து-உன்னை
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!!
======================================================
வங்காள விரிகுடாவின் வயிட்ட்றுப் பகுதியான மாமல்லபுரத்து கடற்கரையில் அமர்ந்து எழுதியது.
======================================================