கடந்த நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
என்
ஞாபக குளமெங்கிலும்
நீரலையாய்
நினைவலைகள்!!
மார்கழிப் பனியில்
அம்மா கோலம் போடுகையில்
காதை மூடியபடி-வாசலில்
அமர்ந்திருந்ததும்!!
அம்மிக் கல்லில்
சட்னி
அறிக்கையில்
சிதறிய தேங்காய் சில்லையும்
விலகிய பொட்டுக் கடலையும்
வாயில் போட்டதும்!!
காலாண்டு தேர்வில்
குறைந்த மார்கிற்காய்
அப்பா அடித்ததும்
சற்று நேரத்தில்
அழுகை நிற்க
தேங்காய் பண்
சாப்பிட்டதும்!!
இன்னும்
என் ஞாபக வங்கியில்
இருப்பாய்
இருக்கிறது!!
மூன்றாம் வகுப்பில்
தோழி ஒருத்தி
கன்னத்தில் அறைந்தது
நேற்று
அவளிடம்
சாட்டிங் செய்கையில்
வலித்தது!!
கவலை என்பது தெரியாமல்
காலம் நேரம் அறியாமல்
கையில் கிரிக்கெட் மட்டையுடனும்
கிட்டிப் புல்லுடனும்
திரிந்த நாட்கள்
புது மலராய்-இன்னும்
புத்திக்குள் மனகிறது!!
ஒன்பதாம் வீட்டின்
பெரிய நெற்றி கிழவியும்
எங்களை கடக்கையில்
ஓரக் கண்ணால் பார்த்த
அந்த
கோல்டா பொண்ணும்
இன்னும்
என் நினைவு வெளிகளில்!!
பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும்
சிறகுகள் முளைத்த பறவையாய்
கனவுகளோடு
கல்லூரிக்குள் நுழைந்ததும்!
அங்கே சொர்க்கம் இல்லாத போதும்
சுதந்திரமாக இருந்த நொடிகளும்
இன்னும் பசுமையாய்
என் நெஞ்சுக்குள்!!
சீருடை அணிந்த தேவதைகளில்
ஒருத்தியிடம் மட்டும் மனது லயித்ததும்!!!!
அவளுக்காய் கவிதை வடித்த
காதல் நொடிகளும்!!
அவளிடம்-என்
அன்பை சொல்லமுடியாமல்
தவித்த நொடிகளும்!!
குறிப்பாய்-
இன்னும்
தவிக்கின்ற நொடிகளும்!!
இப்படி
பலதரப்பட்ட
நொடிகளையும்
முகங்களையும்
தனிமையில் இருக்கையில்
நினைத்து பார்க்கிறேன்
என் மனம்
தனிமை துயரை விடுத்து
மழலை குழந்தையாய்
சிரிகிறது!!
கண்களில் கண்ணீருடன்!!
விலகிய போட்டுக் கடலையும்
ReplyDelete????
பொட்டுக் கடலை is correct ....
Are you following Tamil grammar ?
Thanks da machi...
ReplyDelete