Wednesday, June 30, 2010

உன் நினைவில்!

புலன் ஐந்தை

புதுப்பிக்கும்

புல்வெளியில் படுத்திருந்தேன்!!

பூஞ்சாரல் மேகமில்லா

புதுவானம் பார்த்திருந்தேன்!!

பூப்போல உன்முகம்-என்

நினைவெளியில் வந்தவுடன்!

ஓர்வண்ண வானத்தில் -நான்

ஏழ் வண்ணம் பார்த்திருந்தேன்!!

பல்லவ சிற்பங்கள்-என்னை

பகடியாய் பார்த்திருக்க

பாறையின் இடுக்கிலும்-உன்

பால்முகம் ரசித்திருந்தேன்!!

காலில்லா காற்றுக்கு

சலங்கைகள் கட்டிவிட்டு - அதன்

ஜதி சொல்லும் பாதத்தில்-உன்

சுவடுகள் பார்த்திருந்தேன்!!

திசை எட்டும் உன் பிம்பம்

தீபம் போல் ஒளிர்ந்திருக்க!!

என் கண்ணீரின் தடத்தை

காதலால் அடைத்திருந்தேன்!!

எங்கேயோ ராகங்கள்

ஒலியினில் சேர்ந்திருக்க

பெயரில்லா ரகத்திற்கு-நான்

வார்த்தைகள் அடுக்கிவைத்தேன்!!

கடல் கொண்ட அக்கரையை

காவலுக்கு வைத்துவிட்டு!

உன் பிரிவால் நான் மட்டும்

இக்கரையில் வாடுகிறேன்!!

எத்தனையோ நாளாகியும்

எட்டாத நிலா பிடிக்க

ஆர்பரிக்கும் அலைகளுக்கு-நான்

ஆதரவாய் நிற்கின்றேன்!!

இயற்கையிடம் பேசுவதாய்

இதயத்தை சொல்லிவிட்டு

எழுத்துக்கள் கோர்துவைத்து-உன்னை

எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!!

======================================================

வங்காள விரிகுடாவின் வயிட்ட்றுப் பகுதியான மாமல்லபுரத்து கடற்கரையில் அமர்ந்து எழுதியது.

======================================================

No comments:

Post a Comment