Wednesday, March 10, 2010

விடிந்தது இரவு!!!!

பெண்!!
நம்
வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும்
பூரணமாக்கும் வரம்!!!
ஒவ்வொரு நிகழ்வுகளையும்
சாத்தியமாக்கும் பலம்!!

அடுக்களை தேசத்தில்
அடிமையாய் இருந்தவள்!
இன்று
சுதந்திர வானத்தில்
சிறகுகள் விரிகிறாள்!

உயிர்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை மட்டுமல்ல தாங்களேன்று
உலகிற்கு உணர்த்திவிட்டாள்!!
கல்வியின் துணைகொண்டு
ஆணாதிக்க சமூகத்தின்
நூற்றாண்டு இருளை
நொடியினில் விரட்டிவிட்டாள்!!

கால் பதித்த துறையிலெல்லாம்
விஸ்வரூபம் காட்டிவிட்டாள்!!
ஆணுக்கு பெண் சமம் என்பதை
பெண்ணுக்கே ஆண் சமமென்று ஆக்கிவிட்டாள்!!

சீதை நளாயினி கண்ணகி என்னும்
முதுமக்கள் தாழிகளை பரணில் ஏற்றிவிட்டாள்!!
அவ்விடங்களில்
மங்கம்மாள் வேலுநாசியார் நாகம்மை
மணியம்மை என்னும் வீரத் திலகங்களை
மாற்றிவிட்டாள்!!

சுய சிந்தனையற்றவள் என்று
புராணங்கள் செப்பியதை - தன்
அறிவாலே பொசுக்கி விட்டாள்!!
தம் பாதங்கள் பயணிக்க
பாதையினை விசாலமாக்கி கொண்டாள்!!

பூவோடும் நதியோடும்
ஒப்பிட்டு வந்தவர்களை
புயலுக்கும் பெண் பெயரை
வைக்கும் நிலை செய்துவிட்டாள்!!
மெல்லினத்தின் அடையாளம் உடலுக்கே
உணர்வுக்கு இல்லையென்று ஊருக்கு சொல்லிவிட்டாள்!!

நூற்றில் அறுபது சதம்
இவ்வாறு இருக்கையில்
நாற்பது சதம்
எதிர்மறையாய் இருக்கிறதே!!!!!!!!!

வல்லரசாகும் வேகத்தில்
நடைப்போடும் பாரதமே
பெண்ணினத்தை உயர்த்தாமல்
நீ வல்லரசாகும் சாத்தியமுண்டோ?

33%
கேட்பதே குறைவுதான்
கேட்பதையெனும் கொடுத்துவிடு!!
இல்லையேல் - உன்
வல்லரசு கனவினை
வழித்து எறிந்துவிடு!!

உலகத்து ஆண்களே!!!
பெண்ணின் வாழ்க்கைக்கு
வேலி கட்டி வைத்தவர்களே!!
ஆதிக்க எண்ணத்தை
அடியோடு எரியுங்கள்!!
மோகத்தில் மட்டுமல்ல - நம்
சோகத்திலும் பங்கேற்பவளை
சமமாக மதியுங்கள்!!

உலகத்து பெண்களே!!
பாரதிக்கும் பெரியாருக்கும்
பலித்து விட்ட கனவுகளே!!!
ஒவ்வொரு பூவுக்குள்ளும்
தேன்த்துளி மாதிரி
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
நெருப்பொன்று உள்ளது!!
அதை
திரியில் பொருத்துங்கள்
தீபமாய் ஒளிரட்டும்!!
அகிலத்திற்கு - பெண்கள்
அடிமையில்லை என்பதை
கம்பீரமாய் மொழியட்டும்!!


சென்ற வருட மகளீர் தினத்தில் எழுதியது

No comments:

Post a Comment