குளிர்கால மலர் போல பதமானவள்-இரு
குழை ரெண்டை சுமக்கின்ற கொடியானவள்
இடைமீது உடை கொண்ட பனியானவள்-சிறு
இதழாலே எனை கொல்லும் வலுவானவள்
சந்தங்கள் அடுக்கி வைத்த கவியானவள்-என்
சந்தோஷம் திறந்து வைக்கும் வழியானவள்
கருநீலக் கண் கொண்ட கலையானவள்-என்
கண்ணீரை இனிப்பாக்கும் சுவையானவள்
செந்தாழம் மலர் வீசும் மனமானவள்-காதல்
சொல்லாத என் நெஞ்சிற்கு மணமானவள்
பொல்லாத தனிமையில் என் துனையானவள்-நான்
பெய்கின்ற கவிகளுக்கு அவளே கருவானவள்
என் எரிகின்ற கனவுகளில் நெருப்பானவள்-தினம்
இரவில் தீர்கின்ற எனதுயிருக்கு பொறுப்பானவள்
விண்மீன்கள் விலை பேசும் ஒளியானவள்-நினைவில்
விலகாமல் எனை தொடரும் நிழலானவள்
சிறகில்லா என் உடலுக்கு சிறகானவள்-இருந்தும்
சிறையில்லா எந்தன் மனதுக்கு சிறையானவள்
கரையில்லா என் வாழ்க்கைக்கு கரையானவள்-நீரில்
கரைத்தாலும் விலகாத நிலவின் கறையானவள்
என் இதழ்களின் செயல்களில் சிரிப்பானவள்-என்
இரு கைகளின் செயல்களில் அனைப்பானவள்
என் எண்ணத்தின் செயல்களில் சொல்லானவள்-துடிக்கும்
என் இதயத்தின் செயல்களில் அன்பானவள்
எல்லாரும் முயன்றும் முடியாத மலையானவள்-அவள்
எனக்காக எனதருகில் உயிர்ச் சிலையானவள்
என்றென்றும் தீராத கடலின் அலையானவள்-நெஞ்சில்
எப்போதும் சுரக்கின்ற காதலில் நிலையானவள்
************************************************************************************
இந்த கவிதையில் உள்ளவள் யாரென்று கேட்காதீர்கள், ஏன்னென்றால்?
பதில் இல்லா கேள்வி பயனற்றது!!
************************************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteyaruda ava?avalathan nanga ithellam vasikka vendiyathu irukku?
ReplyDeleteCool da just kidding really nice!!!
Nice.....!!!!
ReplyDelete