Monday, August 2, 2010

நாக்கை அறுத்தெறிவோம்!!

பூங்காவில் புயலை போல
மனித மனங்களில்
மதங்கள் வீசியது!!
புயல் போன பின்னாலே
நிமிரும் பூங்கொடிகள் கொஞ்சம்!!
உயிர் போன பின்னாலும்
மாறவில்லை
மனித நெஞ்சம்!!

உயிர் காக்கும் கடவுள்களா
உயிர் போக காரணங்கள்?
கடவுள் வரும் பாதைக்கு
மனித எலும்புகளா தோரணங்கள்??

பூஜைக்கு
பூப்பறித்த கைகளில்-இன்று
ஆயுதம்
அறுவடை செய்கிறார்கள்!
அன்பை போதித்த கடவுள்கள் எல்லாம்
அமைதியாய் ஏனோ இருக்கிறார்கள்!!

எல்லோர் கண்ணீரும் கரிக்கும்தான்
எல்லோர் ரத்தமும் சிகப்பேதான்
உடைகள் எல்லாம் தொலைத்தோமானால்
நிர்வாணம் என்பதும் ஒன்றேதான்!!

வெடித்து சிதறும் உடல்களில்
ஆணும் பெண்ணுமே உண்டு
ஆறடி குழியில் புதைந்தபின்
இந்து முஸ்லிம் ஏது?

கடவுள் பேரில் போர்களேன்றால்
மனிதன் வாழ்வது எப்படியோ?
மனிதன் இங்கே இல்லையென்றால்
கடவுள் வாழ்வதும் எப்படியோ??

முருகனே பெரியோன் என்றோ
அல்லாவே சிறந்தவன் என்றோ
கிறிஸ்துவே உயர்ந்தோன் என்றோ
எவர் சொன்னாலும் கூப்பிடுங்கள்
அவர்கள் நாக்கை நாமும் அறுத்தெறிவோம்!!
மதங்கள் இல்லா
மனித சமூகத்தை
ஒன்றாய் நாமும் அமைதிடுவோம்!!

No comments:

Post a Comment