Tuesday, February 16, 2010

வருகிறேன்

அன்புடையீர்,

வணக்கம். தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் இந்த உலகத்தில், அதற்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொன்று, கவிதை படிப்பவர்களை விட கவிதை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம். இன்று முதல் அந்த எண்ணிக்கை ஒன்று கூடுகிறது, எனது வருகையால்.

கவிதை செய்யும் பித்தர் களின் கூட்டத்தில் புதிதாய் இணையும் பித்தன் நான், மனிதர்களின் பாவங்களை விரும்பி ஏற்ற ஏசு பிரானை போலவே நானும் இந்த பட்டத்தை விரும்பியே ஏற்கிறேன். அதன் பயனாக வருகின்ற கவிதையை பதிய இந்த வலை பூவை களமாக்கி கொள்கிறேன்.

நான், எனது எண்ணங்களை பதிவதர்க்கு கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்: ஒரு பௌதிக விதியை இலகுவாக விளக்க உதவும கணிதத்தை போலவே எனக்கு கவிதை இருந்ததனால் மட்டுமே.

இது வரை நான் மட்டுமே ரசித்து வந்த எனது கவிதைகளை (நான் மட்டுமாவது ரசித்து வந்தேனே!!) உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தில் தனக்கான இடம் தேடும் ஒரு சிட்டுக்குருவியின் உணர்வோடு.


விரைவில் கவிதைகளுடன் உங்களை சந்திக்க வருகிறேன்!!!

கார்த்திக்

1 comment:

  1. machi....... eppothu unn padaipai thudangum....

    adikkal nattuvaithuvittai eppothu padayal podduvai............

    ReplyDelete