மலரோடு பிறந்தவளே - என்
மனதோடு கலந்தவளே
விலகியே இருந்தாலும் - என்
விழிகளில் கரைந்தவளே
மருதாணிக் கைகளில் - என்னை
மடித்துக் கொண்டாய்
வெறும் சிரிப்பாலே - குளிர்
வெந்நீரில் தள்ளிவிட்டாய்
படியாத என்னை - ஒரு
பார்வையிலே படியவைத்தாய்
விடியாத இரவுகளில் - என்
விழிகளை விழிக்கவைத்தாய்
இளமைக்கு பரிசாக - நீ
எனக்கு கிடைத்துவிட்டாய்
வளமையான உன்னழகில் - என்னை
வசதியாய் மடித்துவிட்டாய்
சட்டென்று நெஞ்சத்தில் - நீதான்
சம்மனம் போட்டுவிட்டாய்
பட்டென்று பார்த்ததில் - என்னை
பதியாய் உருகவைத்தாய்
சினமான கவிஞன் - என்னை
சிப்பிக்குள் சிறைவைத்தாய்
கனமான கனவுகளை - எந்தன்
கண்களுக்குள் விதைத்துவிட்டாய்
உதயத்தை காண்கையில் - உன்னை
உள்ளத்தில் புள்ளிவைப்பேன்
இதயத்தின் எண்ணத்தை - உன்னிடம்
எப்படி சொல்லிவைப்பேன் ?
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDelete