Saturday, February 27, 2010

உடையட்டும் அன்று

வண்ணம் தீர்ந்த வானவில்
வற்றித் தொலைந்த பெருங்கடல்
தேன் இல்லாத பூக்கள்
தேர் இல்லாத கடவுள்
சுழன்று முடித்த பூமி
சுடுவதை மறந்த சூரியன்
இவைகளை எல்லாம்
உலகம் காணும் நாளில்
உடையட்டும் நம் காதல்!!!!

3 comments:

  1. இவை மட்டுமல்ல,

    மனிதம் இல்லாத மனிதனை
    காணும் நாளில்
    உங்கள் காதல் உடையட்டும்

    ReplyDelete