Saturday, February 27, 2010

தமிழ் வணக்கம்

ஆயிரம் பெரியோர்
அவர்தம் திருவாயில்
அழகாய் அமர்ந்து
அகிலம் ஆளும்
தமிழே!

எழுத்தாய் பிறந்து
சொல்லாய் வளர்ந்து
செய்யுளாய் விரிந்து
உரைநடையாய் உயர்ந்து-பின்
எங்கள்
உயிராய் ஆன
தமிழே!

தெய்வங்களை பாடிய பெரியோர்
தேவர்களை ஏற்றிய பெரியோர்
காவியங்கள் இயற்றிய பெரியோர்- பின்னர்
காதலை பாடும் பெரியோர்-இந்த வரிசையில்
என்னையும் எழுத தூண்டிய
தமிழே!

இயலாய்!
இசையாய்!
நாடகமாய்!
நான் கண்ட
முத்தமிழே!

என்
கற்பனை என்னும்
கால்வாயை
கவிதை கடலில்
சங்கமிக்க வைத்த
தமிழே!

உனக்கு
என் கவிதையால்
செய்கிறேன்
தமிழ் வணக்கம்!

என்றென்றும்
உனக்கே
என்
முதல் வணக்கம்!!

1 comment:

  1. ada paru da ivanga kavithayella yeluthuranga...ivangalukulla enna mo irukku!!!!
    its very nice da...

    ReplyDelete